Wednesday, 23 November 2011

துளிகள்

எங்கே போய் சேரப்போகிறோம்

என்று தெரியாமல்

விண்ணிலிருந்து விடைபெறும்

மழைத்துளிகள்!

எதற்காக அழுகிறோம்

என்று தெரியாமல் என்

கண்ணிலிருந்து விடைபெறும்
 
கண்ணீர்த்துளிகள்... !!
 

Wednesday, 9 November 2011

வானவில்


எந்தத் தூரிகை கொண்டு
யார் தீட்டிய
ஒவியம் இது
வானில்?
வானவில்!



காதல்கரை


கடற்கரை மணலில்
நான்
எழுதிவைத்த நம் பெயரை
அலை வந்து அழிப்பதுவும்..
மீண்டும் நான் எழுதுவதும்
சலித்துப் போகவேயில்லை....
அலைக்கும்,எனக்கும்......!!!

தேர்தல் களத்தில் காதல்

நான்
மேடையில் பேசும் அரசியல்வாதிகளைப்போல்
வாக்குறுதிகளை எல்லாம்
அள்ளிவளங்குகிறேன்!
நீயோ
பட்டுத் தெரிந்துகொண்ட
மக்களைப்போல்
அவற்றையெல்லாம்
அமைதியாக
நிராகரித்துக்கொண்டிருக்கிறாய்!!

Tuesday, 8 November 2011

நிழல்



நிழலே!

நீ நிஜத்தின் விம்பம்.

விம்பங்கள் தோற்றுவிக்கப்படலாம்

ஆனால்-அவை

நிலை பெறப்போவதில்லை.

நிலையற்ற எல்லாமே

அழகானவையே..!

மௌன மொழி


புராதன வரலாற்று

ஏடுகளையெல்லாம்

புரட்டிப் பார்க்கிறேன்...

உன் விழிகள் பேசும்

மௌன மொழி

எவ்வினத்தைச்

சேர்ந்ததென்று...!

Thursday, 3 November 2011

காதல் போட்டி


யார் காதல் பெரிதென்று

நாம் போட்டுக்கொள்ளும்

சண்டையில்

நம்மிருவருக்குமே தெரியாமல்

ரகசியமாய்க் கைகுலுக்கிக்கொள்கிறது

நம் காதல்...!

சுவடு


தெருவில்தான்

நடந்துசெல்கிறாய்...

என் இதயமெங்கும்- உன்

பாதச்சுவடுகள்...!!!