Friday, 9 December 2011

சந்தேகம்



உன் கண்ணீரைத் துடைக்க வரும் 
என் விரல்களையா
உன் கண்கள் 
தங்களைக் குத்த வருவதாய்ச்
சந்தேகிக்கின்றன...?

தெரிந்து கொள்..! 
துடைத்துவிட உன் விரல்கள் 
மட்டும் இருக்குமாயின்
காலம் பூராக அழுவதற்கும் 
என் கண்கள் தயார்...!

மனசு


நாமிருவரும்

பேசிக்கொண்டிருப்பதை விட

மௌனமாய்

அமர்ந்திருக்கும்போதுதான்

அதிகம் பேசிக் கொள்கிறோம்..!

அர்த்தம்

 
வார்த்தைகளை விட

மௌனம் அழகானது...

 
உன்னால்
 
சொல்லமுடியாததை எல்லாம்

உன் மௌனம்

எனக்குச் சொல்லிவிடும்...

 
நீ பேசும்போது

அழகாயிருக்கிறாய்!

மௌனமாய் இருக்கையில்

அதனிலும் அழககாயிருக்கிறாய்!!

பரிசு

 

எப்படி முடிகிறது உன்னால்

நான் தரும்

வலிகளை எல்லாம்

வாங்கிக்கொண்டு

புன்னகையை மட்டுமே

எனக்குப் பரிசளிக்க...?

அன்பு


உனது அழகு

அன்பானதா என்று

எனக்குத் தெரியாது


ஆனால்

எனது அன்பு

அழகானது என்று மட்டும்

நிச்சயமாய்த் தெரியும்!

கிறுக்கி

 
உன் கோழிகிறுக்கல்

கையெழுத்தைப் பார்த்துவிட்டு

சரியான

கிறுக்கன் என்று

நினைத்திருந்தேன்...


கடைசியில் கிறுக்கியாய்ப்

போனதென்னவோ நான்தான்

உன்னிடத்தில்...!

தோல்வி

 
வெற்றியின்

உற்ற நண்பி நான்!

விளையாட்டாய்க் கூட

எனக்குத் தோற்றுப் போகச்

சம்மதமில்லை...

 
ஆனால் உன்னிடத்தில் மட்டும்

தோற்றுப் போவதையே

சம்மதிக்கிறேன்...!