காதலிப்பவர் எல்லாம்
கவிதை எழுத வேண்டும் என்பது என்ன
சர்வதேச சட்டமா?
அல்லது காதலர் சட்டமா??
யார் யாரோவெல்லாம்
கிறுக்கியதைக் கொண்டுவந்து
படித்துக்கொண்டிருக்கிறாயே...!
அடியே என்
பேதைக் காதலியே...
எனக்கு மட்டுமே கிடைத்த
அற்புதமான
கை கால் முளைத்த
கவிதை நீதான்
என்பதை
எப்போது புரிந்துகொள்ளப் போகிறாய்?
No comments:
Post a Comment