Friday, 9 December 2011

ஆறு மணிக் கனவு

 

என் அறையின்

சுவர்க் கடிகாரமும்

என் இதயமும்
 
போட்டி போட்டுக் கொண்டு

துடிக்கின்றன...

 
விடிந்தும் விடியாத

காலப் பொழுதில்

கட்டிலின் இதம் தரும் சுகத்தில்

உறக்கத்திற்கும் விளிப்புக்குமிடையே

ஓர் மயக்க நிலை...!

 
மப்பும் மந்தாரமுமாய்

வானம் அழ ஆரம்பிக்க...

குளிர் காற்றொன்று
 
எங்கிருந்தோ வந்து
 
என்னைத் தழுவ...

என் எதிர்காலம்
 
கண் முன்னே
 
அழகாய் விரிகிறது...

 
தூரத்தே மங்கலாய்
 
அழகிய ஒரு உருவம்

ரமணிச்சந்திரன்
 
கதாநாயகன் போல் உயமாய்

எனக்குப் பிடித்தமான
 
மெல்லிய தாடியுடன்

அவன் எதோ
 
என்னிடம் சொல்லத் தொடங்க

என் தாய் என்னை தேநீர் குடிக்க எழுப்புகிறார்..

 
உறக்கம் கலைய

கனவு கலைய

கற்பனை கலைய

துயில் கலைகிறேன் நான்...

எனக்கே என்மேல் கோபம் வருகிறது!

 
ச்சே...

இந்தக் கன்றாவிக்குதான்
 
 உம்மா சொன்னாவோ

"விடிஞ்ச பிறகும்
 
படுக்காதேடி!" என்று...

No comments:

Post a Comment